Saturday 2 January 2016

திருப்பிரமபுரம் - சீர்காழி - 10

பாடல் - 10
ராகம்: ரேவதி
தாளம் - ஆதி, திஸ்ர நடை

புத்தரோடு பொறியில் சமணும் புறங்கூற நெறி நில்லா
ஒத்த சொல்ல உலகம் பலிதேர்ந்து எனது உள்ளம் கவர் கள்வன்
மத்த யானை மறுகவ்வுரி போர்த்தது ஓர் மாயம் இதுவென்ன
பித்தர் போலும் பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே

பொருள்:

புத்தம், சமணம், காபாலிகம், பூர்வ மீமாம்சம் போன்ற பிற வழிகளை பின்பற்றி, நெறி தவறி, சைவத்தை புறம் கூறுவோர்களின் சொல் ஒருநாள் மறைந்து போகும். ஏனெனில் சனாதன தர்மமே (அத்வைத தத்துவம்) நிலையான ஒன்று. அத்வைதமே சத்தியம்.

இந்த சைவ நெறியின் தலைவன், சிவபெருமான், உலகம் முழுதும், பிக்ஷை எடுத்து வருவதில் உள்ளம் மகிழ்வார். அதாவது தனக்கு என்று ஒன்றும் சேர்த்துக்கொள்ளாமல், அன்றாடத்திற்கு தேவையானவற்றை வைத்துக்கொண்டு, எல்லாருக்கும் பிரித்து கொடுக்க வேண்டும். வருவதை பகிர்ந்து உண்ண வேண்டும். நம் சனாதன தர்மத்தில், அதிதி போஜனம் என்ற விருந்தோம்பல் முக்கியமான ஒன்று. அவ்வாறு பிக்ஷை எடுத்து வந்தாலும், நம் யாவரின் உள்ளதையும் கவரும் கள்வர்.

தாருகா வன முனிகள் ஏவிய மத யானையினை அழித்து, அதன் தோலினை பெருமான் உடுத்திக்கொண்டார். இது என்ன மாயம் என்று காண்போர் ஆச்சர்யம் படும் முன், பித்தர் போல அனந்த நடம் ஆடத்தொடங்கினார் இந்த பெருமான். பிரமாபுரம் தன்னில் மேவும் பெருமானும் இவரே.

பாடல் கேட்க:

Check this out on Chirbit

No comments:

Post a Comment