Thursday 21 January 2016

திருநெடுங்களம் - பதிகத்தின் பலன்

ராகம் - மத்யமாவதி
தாளம் - ரூபகம்

நீடவல்ல வார்சடையான் மேய நெடுங்களத்தைச்
சேடர் வாழும் மாமறுகிற் சிரபுரக்கோன் நலத்தால்
நாடவல்ல பனுவல் மாலை ஞான சம்பந்தன் சொன்ன
பாடல் பத்தும் பாட வல்லார் பாவம் பறையுமே

பொருள்:

நீண்டு, வளர்ந்துக்கொண்டே இருக்ககூடிய சடை முடி தரித்த சிவபெருமான் எழுந்தருளிய திருநெடுங்களத்தை, பெரியோர் பலர் வாழும் ஊரும், பெரிய வீதிகள் நிறைந்த ஊருமான சீர்காழியின்   (சிரபுரம்) தலைவன் (கோ), ஞானசம்பந்தன், பாடிய,  நன்மை தரவல்ல இந்த பத்துப் பாடல்களை பாடுவோரின் பாவங்கள் யாவும் தொலைந்துப்போவது உறுதி.

சீர்காழியில் பிறந்த புலவர்களுள் தலைச்சிறந்த ஞானசம்பந்தர், சீர்காழியின் தலைவன் என்று தன்னை சொல்லிக்கொள்வதில் மாற்றுக்கருத்து ஒன்றும் இருக்காது என எண்ணுகிறேன்.

பாடல் கேட்க:

Check this out on Chirbit

No comments:

Post a Comment