Saturday 26 December 2015

திருப்பிரமபுரம் - சீர்காழி - 4

பாடல் - 4
ராகம்: வராளி
தாளம் - ஆதி, திஸ்ர நடை

விண்மகிழ்ந்த மதில் எய்ததும் அன்றி, விளங்கு தலை ஓட்டில்
உண்மகிழ்ந்து பலி தேரிய வந்து, எனது உள்ளம் கவர் கள்வன்
மண்மகிழ்ந்த அரவம், மலர்க் கொன்றை மலிந்தவரை மார்பில்
பெண்மகிழ்ந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே

பொருள்:

விண்ணில் உள்ள ஒரு கோட்டை, திரிபுரம். அசுரர்கள் மயனின் உதவி கொண்டு அமைத்த நகரம் அது. அதில் உள்ள மதில்கள் மிக சிறப்பு வாய்ந்தவை. அந்த மதில்களை, ஒற்றை அம்பினை எய்தி, அழித்தார் சிவபெருமான். அதுமட்டும் அல்லாது, கபாலத்தை கையில் ஏந்தி, பிக்ஷை எடுத்து மகிழ்வார். இவர் நம் உள்ளதை கவர்ந்த கள்வர்.

மண்ணில் மகிழ்ந்து இருக்கும் பாம்பினை (அரவம் - பாம்பு) தன் கழுத்தில் அணிந்துள்ளார். கொன்றை மலரால் கட்டிய மாலையினை தன் மார்பில் அணிந்துள்ளார்.

அம்பிகைக்கு தன் உடலில் ஒரு பாதியைக் கொடுத்து மகிழ்பவர்.

இந்த சிறப்புகள் நிறைந்த நம் பெருமானே, பிரமாபுரத்தில் மேவுபவர்.

பாடல் கேட்க:

Check this out on Chirbit

No comments:

Post a Comment