Thursday 31 December 2015

திருப்பிரமபுரம் - சீர்காழி - 8

பாடல் - 8
ராகம் - கானடா
தாளம் - ஆதி, திஸ்ர நடை

வியரிலங்குவரை உந்திய தோள்களை வீரம் விளைவித்த
உயர் இலங்கை அரையன் வலி செற்றெனது உள்ளம் கவர் கள்வன்
துயரிலங்கும் உலகில் பல ஊழிகள் தோன்றும் பொழுதெல்லாம்
பெயரிலங்கு பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே

பொருள்:
வியக்கத்தக்க வலிமை பொருந்திய உயர்த்திய தோள்களை உடைய இலங்கை அரசன் ராவணன் பல வீரச்செயல்களை செய்துள்ளான். அவனது வீரத்தை வெற்றிக்கொண்ட நம் உள்ளம் கவர் கள்வன் சிவபெருமான். ஒருமுறை கயிலை மலையினையே பெயர்த்து எடுத்து இலங்கைக்கு செல்ல முயற்சி மேற்கொண்ட ராவணன், சிவபெருமானின் கால் கட்டை விரல் அழுத்தி மிதித்ததால், மலையினை பெயர்க்க முடியாமல் தோல்வியுற்றான். இவ்வாறு இலங்கை அரசனின் வலிமையினை வெற்றிக்கொண்ட நம் உள்ளம் கவர் கள்வன் இவர்.

துயரம் நிறைந்த இவ்வுலகினில், பிரளய காலம் தோன்றும் பொழுதெல்லாம், மூழ்காமல் மிதந்து காணப்பட்ட இந்த பெயர் பெற்ற பிரமாபுரத்தில் மேவுபவர்.

பாடல் கேட்க:

Check this out on Chirbit

No comments:

Post a Comment