Friday 8 January 2016

திருநெடுங்களம் - 2

பாடல் 2
ராகம்: பேகடா
தாளம்: ரூபகம்

கனைத்தெழுந்த வெண்டிரைசூழ் கடலிடை நஞ்சு தன்னைத்
தினைத்தனையாம் இடற்றில் வைத்த திருந்திய தேவ நின்னை
மனத்தகத்தோர் பாடல் ஆடல் பேணி இராப்பகலும்
நினைத்தெழுவார் இடர் களையாய் நெடுங்களமேயவனே

பொருள்:

கனைத்தெழுந்த - கனைத்து எழுந்த - சப்தம் செய்துக்கொண்டு எழுந்த

வெண்டிரைசூழ் கடலிடை நஞ்சு தன்னைத் - வெண்மையான அலைகள் என்னும் திரையினால் மூடப்பட்ட கடலிலிருந்து (திருப்பாற்கடல்) தோன்றிய நஞ்சினை உண்டு

தினைத்தனையாம் இடற்றில் வைத்த திருந்திய தேவ - அந்த சிறிதளவு நஞ்சினை நின் தொண்டையில் நிறுத்திக்கொண்ட தேவனே,

நின்னை மனத்தகத்தோர் பாடல் ஆடல் பேணி இராப்பகலும் 
நினைத்தெழுவார் இடர் களையாய் நெடுங்களமேயவனே - உன்னை உள்ளத்துள் நினைத்து, இரவு பகலாக, ஆடி பாடி நினைத்து வழிபடும் அடியார்களின் துயரங்களை தீர்ப்பாய், நெடுங்களம் மேவும் இறைவனே!

பாடல் கேட்க:

Check this out on Chirbit

No comments:

Post a Comment