Tuesday 12 January 2016

திருநெடுங்களம் - 4

ராகம்: மோகனம்
தாளம்: ரூபகம்

மலை புரிந்த மன்னவன் தன் மகளை ஓர் பால் மகிழ்ந்தாய்
அலை புரிந்த கங்கை தங்கும் அவிர் சடை ஆரூரா
தலை புரிந்த பலி மகிழ்வாய் தலைவ நின் தாள் நிழல் கீழ்
நிலை புரிந்தார் இடர் களையாய் நெடுங்களமேயவனே

பொருள்:

நெடுங்களத்தில் இருக்கும் இறைவனே, இமவானின் மகளை நீ உனது உடலில் ஒரு பாதியாகக் கொண்டு மகிழ்பவன். அலைகள் பொங்கும் கங்கையினை, உன் சடையில் தாங்கிக்கொண்டாய்.

அவிர் சடை - கட்டாத சடை முடி.
ஆரூரா - திருவாரூரிலும் அருள்பவன் நீயே.

பிரம்மாவின் 5 ஆம் தலையை கொய்ததால், அந்த தலையின் கபாலம் (மண்டை ஓடு) உன் கையில் ஒட்டிக்கொண்டது. அதனை கையில் ஏந்தி பிக்ஷை செய்வதில் மகிழ்பவன். உனது திருவடிகளின் கீழ் நிலையாக நிற்பதில் என்றும் மகிழ்வுறும் உன் அடியார்களின் இடர்களை நீக்குவாயாக.

பாடல் கேட்க:

Check this out on Chirbit

No comments:

Post a Comment