Thursday 14 January 2016

திருநெடுங்களம் - 6

ராகம் - பந்துவராளி
தாளம் - ரூபகம்

விருத்தனாகி பாலனாகி வேதம் ஓர் நான்கு உணர்ந்து
கருத்தனாகி கங்கையாளைக் கமழ் சடைமேல் கரந்தாய்
அருத்தானாய ஆதி தேவன் அடியிணையே பரவும்
நிருத்தர் கீதர் இடர் களையாய் நெடுங்களமேயவனே

பொருள்:

திருநெடுங்களத்தில் அருளும் இறைவா, நீயே (விருத்தன் - முதியவன்) முதுமை வேடம் தரித்தும், இளமை வடிவம் கொண்டும் வேதங்கள் நான்கினையும் நன்கு உணர்ந்த தலைவன் (கருத்தன்).  நீயே கங்கையினை மனம் கமழும் நின் சடையின் மேல் வைத்துக்கொண்டாய். நீயே ஞானமே வடிவான முதற்கடவுள் (ஆதி தேவன்).  உனது திருவடிகளே துணை என்று  போற்றி ஆடியும், பாடியும் தொழும் அடியார்களின் இடர்களை நீக்கி அருள்வாயாக.

பாடல் கேட்க:

Check this out on Chirbit

No comments:

Post a Comment